Categories: இந்தியா

எங்கள் வெற்றியை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்க்கிறார்கள்.! பிரதமர் மோடி பேச்சு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார்.

கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை நிகழ்த்தினார். அதில் பேசுகையில்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மக்களின் நம்பிக்கையே காரணம். சுதந்திர இந்தியாவின் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் ஒரு அரசுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் ஆட்சி வழங்கியுள்ளனர். இது சாதாரண விஷயம் அல்ல.  கடந்த இரண்டரை நாட்களில், சுமார் 70 எம்.பி.க்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் உரை மீதான இந்த விவாதத்தை வளப்படுத்தியதற்காக எம்.பி.க்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் உரையாற்றி கொண்டு இருக்கும் போதே எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.

பொதுமக்கள் அளித்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்கின்றனர். எங்கள் வெற்றியை இருட்டடிப்பு செய்ய எதிர்கட்சி உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். மேலும், மாநிலங்களவை தலைவர் ஜன்தீப் தன்கர் எதிர்க்கட்சி எம்பிகளை அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் குறிபிட்டார். இருந்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர் அமளிக்கு மத்தியிலும் பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்தார். அதில், இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை நிச்சயம் செய்து முடிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது பதிலுரையில் குறிப்பிட்டார். பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே பிரதமர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

1 hour ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

2 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

3 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

3 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

4 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

5 hours ago