இந்திய பிரதமருடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திடீர் சந்திப்பு.. இருதரப்பு குறித்த முக்கிய ஆலோசனை..

Published by
Kaliraj
  • நேற்று அதாவது  ஜனவரி14ம் தேதி நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் குறித்த ரெய்சினா மாநாடு டில்லியில்  துவங்கியது.
  • இதற்கிடையே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்திய பிரதமருடன் திடீர் சந்திப்பு.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 7 நாடுகளின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இந்தியா வந்தனர். இந்த மாநாட்டில்  உலகளாவிய சவால்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். இதை தொடர்ந்து, 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில், ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ்  ஜனவரி 15ம் நாளான இன்று இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிடுள்ளார், அதில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த உரையாடல் எங்களின் நீண்டகால நட்பை பிரதிபலித்தது. இவ்வாறு அந்த பதிவில்  கூறியிருந்தார்.

Published by
Kaliraj

Recent Posts

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

15 minutes ago

தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…

21 minutes ago

வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…

45 minutes ago

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…

1 hour ago

TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…

2 hours ago

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

3 hours ago