பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார். இந்த விழாவில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து கொள்வார்.
இதன்படி இந்தத் திட்டத்தின் கீழ் 9.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவர். விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த, சுமார் 19,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளின் வங்கி கணக்கில், மூன்று தவணையாக பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
2020-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதியன்று சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 10.5 கோடி. ஆனால் கட்டாய ஆதார் அங்கீகாரத்தை அமல்படுத்திய பின், 9.5 கோடி விவசாயிகள் மட்டுமே இந்த சலுகையை பெறுவதற்கு உகந்ததாக கருதப்பட்டனர். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.15 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…