வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை குஜராத்தின், வடோதரா மாவட்டத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,விபத்தில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “வடோதரா விபத்து குறித்து மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் துணை நிற்கிறேன். காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அரசு நிர்வாகம் விபத்து ஏற்பட்ட இடத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…