ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு , பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயல்வதாகத் தெரிவித்தார்.
மாநிலப் பிரிவினைக்குப் பின் ஆந்திர மாநிலத்துக்கு முறைப்படி என்னென்ன சலுகைகள் வழங்கப்பட வேண்டுமோ அதை வழங்கவே தாங்கள் வலியுறுத்தி வருவதாகச் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார். ஜெகன்மோகன் ரெட்டியையும், பவன் கல்யாணையும் தனக்கு எதிராகத் திருப்பும் வேலையில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் எதிரான அலை வீசுவதாகவும், உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…