முதல் 5 நாட்களில் PM CARES நிதிக்கு ரூ.3,076 கோடி.! பெயர்கள் வெளியிடாதது ஏன்? ப.சிதம்பரம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் பொதுநிவராண நிதிக்கு, முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடி கிடைத்துள்ளது என்று நிதியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்தனர்.  இந்நிலையில், பிரதமர் பொதுநிவராண நிதிக்கு, முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடி கிடைத்துள்ளது என்று நிதியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1 முதல் 6 வரையிலான குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவை பொதுவாக பகிரப்படுத்தவில்லை. இதில், பிரதமர் பொதுநிவாரண நிதியில் முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடியில், ரூ.3,075.85 கோடி உள்நாட்டு தன்னார்வ பங்களிப்பிலும்,. ரூ.39.67 லட்சம் வெளிநாட்டு பங்களிப்பிலும் வந்துள்ளது. மேலும், பி.எம் கேர்ஸின் ஆரம்ப கார்பஸ் ரூ. 2.25 லட்சம் இருந்ததாகவும், இந்த நிதிக்கு சுமார் ரூ.35 லட்சம் வட்டி கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்களிப்பாளர்கள் அல்லது நன்கொடையாளர்களின் விவரங்களும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 2020 மார்ச் 26 முதல் 31 வரை வெறும் 5 நாட்களில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3076 கோடி வந்துள்ளதாக PM CARES FUND-இன் தணிக்கையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த நன்கொடையாளர்களின் பெயர்கள் வெளியிடப்படாது ஏன்? ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும், அறக்கட்டளையும் ஒரு தொகையை விட அதிகமாக பங்களிக்கும் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளது. PM CARES FUND இந்த கடமையில் இருந்து ஏன் விலக்கு? அளிக்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படுத்த அறங்காவலர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

10 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

10 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

10 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

11 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

11 hours ago