பிஎம் – கேர்ஸ் நிதி (PM – CARES) என்பது இந்திய அரசின் நிதி அல்ல என்று பிரதமர் அலுவலகம்,டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிஎம் – கேர்ஸ் நிதியை பொது நிதியாக அறிவித்து அதன் விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று ஒரு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது,பிரதமர் அலுவலகம் சார்பில் எழுத்துப்பூர்வ பிரமாணப்பத்திரமானது தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:”பிரதமரின் அவசர கால பிஎம் – கேர்ஸ் நிதியானது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பொது நிதி அல்ல.இதனால்,அதன் விபரங்களை பொதுவெளியில் மூன்றாம் நபருக்கு வெளியிட முடியாது.குறிப்பாக,அது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா தொற்றின் இக்கட்டான காலகட்டத்தில்,பல்வேறு தனிநபர்கள்,நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்திற்கு நிதியுதவி அளிப்பதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த ‘பிஎம் – கேர்ஸ்’ .அதன்படி,நிறுவனங்கள் மற்றும் மக்கள் பலரும் இதன்மூலம் நிவாரணத் தொகை அளித்துள்ளனர்.
இந்நிலையில்,இந்த பிஎம் – கேர்ஸ் நிதியானது பொது நிதி அல்ல என்ற தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது மக்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…