நாளை சமுக ஆர்வலர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

Published by
Venu

வாரணாசியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலமாக உரையாடுகிறார்.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.இந்த ஊரடங்கு சமயத்தில் சரியான வேலை மற்றும் உணவின்றி தவித்து வருகின்றனர்.உணவின்றி தவிப்பவர்களுக்கு சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் உதவி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகங்களுடன் சேர்ந்து  உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில்,வாரணாசி பொதுமக்களும் ,அங்குள்ள சமுக ஆர்வலர்களும் சொந்த முயற்சியால் மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவி வருகின்றனர்.இதன் மூலம் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்துள்ளனர்.கிட்டத்தட்ட 20 லட்சம் உணவு பொட்டலங்கள் மற்றும் 2 லட்சம் ரேஷன் பொருட்களை 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இது தவிர  முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வாரணாசியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அங்குள்ள சமுக ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடுகிறார்.

 

Published by
Venu

Recent Posts

“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!

“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!

சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…

21 minutes ago

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

1 hour ago

Live : கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து முதல்… பஹல்காம் தாக்குதல் நடவடிக்கை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…

2 hours ago

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…

3 hours ago

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…

3 hours ago

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

4 hours ago