இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி பயன்பாடு குறித்தும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிசாவுக்கு அடுத்தபடியாக, டெல்லியிலும் தடுப்பூசிகள் முடிந்துவிட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களுக்கு வழக்கமான, போதுமான மற்றும் தடையின்றி தடுப்பூசி வழங்குவதை அவர் எவ்வாறு உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பதை தயவு செய்து எங்களிடம் கூறுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…