புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை:மார்ச் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல்

Default Image
  •  ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கபட்டது.
  • புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கபட்டது.
அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள்,மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் , தண்ணீர் பாக்கெட் ,பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்,பிளாஸ்டிக் கைப்பை மற்றும் பிளாஸ்டிக் கொடி என 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதேபோல்  புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடைபெற்றது.

இதன் பின்னர்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதன் படி  மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்