அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய் நிலை மோசமடைந்த பிறகு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு கடந்த 26-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , தருண் கோகய்க்கு நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததால் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது அவரது உடல் நிலை இன்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் மருத்துவமனையில் தருண் கோகய் உடன் இருந்தேன், நாளை சட்டசபை இருப்பதால் வீட்டிற்கு திரும்பி வந்தேன். மருத்துவ குழுவுடன் எங்கள் குழு தொடர்பில் இருக்கிறது என தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…