சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. இதனால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் வரவேற்றது. மேலும் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது என்பதை இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு கடந்த 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் நடைமுறையை குறித்து பரிந்துரை செய்த 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நியமித்தது. அக்குழு பரிந்துரையின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண், 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளிகளில் நடத்திய தேர்வுகள், உள்மதிப்பீடு மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற செயல்முறை தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு வெயிட்டேஜ் முறையில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…