Categories: இந்தியா

இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளையர்கள்.. பிரதமர் மோடி உறுதி!

Published by
பாலா கலியமூர்த்தி

PM Modi : இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், கடற்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் MV Ruen என்ற சரக்கு கப்பலை அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, தங்கள் வசம் வைத்திருந்தனர்.

Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

அந்த கப்பலில் பல்கேரியா, மியான்மர் மற்றும் அங்கோலா ஆகிய நாட்டை சேர்த்தவர்கள் இருந்ததாக கூறப்பட்டது. இந்த கப்பல் மற்றும் அதில் இருந்தவர்களை மீட்க இந்திய கடற்படை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் மீட்க முடியவில்லை. இந்த சூழலில் கடந்த 15ம் தேதி இந்திய கடற்பகுதிக்கு அருகே வந்த கடத்தப்பட்ட அந்த MV Ruen சரக்கு கப்பலை, அப்போது ரோந்து பணியில் இருந்த INS போர் கப்பல் தடுத்து நிறுத்தியது.

இதனால், கடற்கொள்ளையர்கள் மற்றும் இந்திய கடற்படையினர் இடையே கடும் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்த நிலையில், கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்து, கடத்தப்பட்ட கப்பலில் இருந்த சுமார் 15 பேரை இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். அதேபோல், MVRuen சரக்கு கப்பலும் மீட்க்கப்பட்டது.

Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!

எனவே, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மற்றும் அதில் இருந்தவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கு பாராட்டுகள் குவிந்தது. அந்தவகையில், கடத்தப்பட்ட பல்கேரியக் கப்பலான “ருயென்” மற்றும் 7 பல்கேரியா நாட்டை சேர்த்தவர்கள் உட்பட கப்பல் குழுவினரை பாதுகாப்பாக மீட்ட INS கடற்படையின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது.

Read More – மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்… வரலாற்று வெற்றி!

இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என பல்கேரிய அதிபர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,  பல்கேரியா நாட்டை சேர்ந்த 7 பேர் பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள். மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், கடற்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என கூறியுள்ளார்.

Recent Posts

ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஹாரி பாட்டர்’ நாயகி மேகி ஸ்மித் காலமானார்!

சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…

15 mins ago

சாலை விபத்தில் சிக்கிய சர்பராஸ் கான் சகோதரர் முஷீர் கான்! நேர்ந்தது என்ன?

மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…

40 mins ago

‘லப்பர் பந்துக்கு’ குவியும் ரிவ்யூ சிக்ஸர்! படம் பார்த்து ஹர்பஜன் சொன்ன விஷயம்?

சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…

2 hours ago

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இந்த 18 மாவட்டங்களில் இன்று கனமழை.!

சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…

2 hours ago

குடும்பத்தை கவர்ந்த ‘மெய்யழகன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…

2 hours ago