பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து வந்த ஒரு புறா, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் தோள் மீது அமர்ந்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு படையினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோராவாலா போஸ்ட் அருகே எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து ஒரு புறா வந்துள்ளது. அந்த புறா வந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் தோள் மீது அமர்ந்தது. அப்போது அந்த புறாவை தூக்கிய பாதுகாப்பு படை வீரர், அதன் காலில் ஒரு துண்டுச்சீட்டு இருந்ததை பார்த்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகம் அடைந்த அவர் அந்த சீட்டினை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் ஒரு போன் நம்பர் இருந்துள்ளது. இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அந்த புறாவை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தோடு புகாரில் இதுகுறித்து சட்டபூர்வமாக விசாரித்து புறா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் சீனியர் காவல்துறை கண்காணிப்பாளர் துருவ் இது குறித்து கூறுகையில், புறா ஒரு பறவை. அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியுமா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பாக சாத்திய அறிக்கையை சட்ட துறையினரிடம் கேட்டுள்ளோம். புறா காலில் இருந்த துண்டு சீட்டில் எழுதப்பட்டிருந்த மொபைலின் குறித்தும் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…