சத்யேந்திர ஜெயினுக்கு தரப்பட்டது பிசியோதெரபி தான் – டெல்லி துணை முதல்வர்

Default Image

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி தான் தரப்பட்டது. அது மசாஜ் அல்ல என டெல்லி துணை முதல்வர் விளக்கம். 

ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் அண்மையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த  குற்றத்தின் பேரில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயந்த்க்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து டெல்லி துணை முதல்வர் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி தான் தரப்பட்டது. அது மசாஜ் அல்ல. முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு இரண்டு முறை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவரின் நோய், அவருக்கு தரப்படும் சிகிச்சையை கேலி செய்யும் எண்ணம் அருவருப்பானது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்