கொரோனா தடுப்பு மருந்து: ஊசி மூலம் செலுத்திய துணைத் தலைவர் ஸ்ரீனிவாசனின் புகைப்படம்? மறுத்த பாரத் பயோடெக் நிறுவனம்!

Published by
Surya

கொரோனா மருந்தான கோவாக்ஸினை அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் உடம்பிற்குள் ஊசி மூலம் செலுத்தும் புகைப்படம் வைரலான நிலையில், அந்த புகைப்படம் போலியானது என பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.6 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அதில் ஒருபங்காக, இந்தியா, ஹைதராபாத்தை தலைமையாக கொண்ட பாரத் பயோடெக் எனும் நிறுவனம், கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, “கோவாக்சின்” தடுப்பூசியை கண்டுபிடித்தது.

இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தியதில் பயனளித்த நிலையில், கோவாக்சின் மருந்தை ஜூலை மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசிஎம்ஆர் அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து ஜூலை 7 ஆம் தேதி முதல் சென்னை உட்பட 12 இடங்களில் இந்த தடுப்பு மருந்து, மனிதர்களிடம் பரிசோதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஸ்ரீனிவாசன், முதல் கோவாக்சின் மருந்தை தனது உடம்பிற்குள் ஊசி மூலம் செலுத்தும் புகைப்படம் ஒன்று, பலரால் பகிரப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்பு தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டது. அந்த பதிவில்

வாட்ஸ் ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் மற்றும் செய்திகள் பாரத் பயோடெக் மூலம் வெளியானவை அல்ல. அங்கு பரவிவரும் புகைப்படமானது, அங்கு உற்பத்தி ஊழியர்களுக்ளையும் பரிசோதிக்கும் ஒரு வழக்கமான இரத்த ஓட்ட நடைமுறையாகும். கொரோனவை எதிர்த்தும், மக்கள் நன்மைக்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

Published by
Surya

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

26 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

38 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

54 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

57 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago