கொரோனா தடுப்பு மருந்து: ஊசி மூலம் செலுத்திய துணைத் தலைவர் ஸ்ரீனிவாசனின் புகைப்படம்? மறுத்த பாரத் பயோடெக் நிறுவனம்!

Published by
Surya

கொரோனா மருந்தான கோவாக்ஸினை அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் உடம்பிற்குள் ஊசி மூலம் செலுத்தும் புகைப்படம் வைரலான நிலையில், அந்த புகைப்படம் போலியானது என பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.6 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அதில் ஒருபங்காக, இந்தியா, ஹைதராபாத்தை தலைமையாக கொண்ட பாரத் பயோடெக் எனும் நிறுவனம், கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, “கோவாக்சின்” தடுப்பூசியை கண்டுபிடித்தது.

இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தியதில் பயனளித்த நிலையில், கோவாக்சின் மருந்தை ஜூலை மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசிஎம்ஆர் அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து ஜூலை 7 ஆம் தேதி முதல் சென்னை உட்பட 12 இடங்களில் இந்த தடுப்பு மருந்து, மனிதர்களிடம் பரிசோதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஸ்ரீனிவாசன், முதல் கோவாக்சின் மருந்தை தனது உடம்பிற்குள் ஊசி மூலம் செலுத்தும் புகைப்படம் ஒன்று, பலரால் பகிரப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்பு தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டது. அந்த பதிவில்

வாட்ஸ் ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் மற்றும் செய்திகள் பாரத் பயோடெக் மூலம் வெளியானவை அல்ல. அங்கு பரவிவரும் புகைப்படமானது, அங்கு உற்பத்தி ஊழியர்களுக்ளையும் பரிசோதிக்கும் ஒரு வழக்கமான இரத்த ஓட்ட நடைமுறையாகும். கொரோனவை எதிர்த்தும், மக்கள் நன்மைக்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

Published by
Surya

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

6 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

8 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

8 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

10 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

11 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

12 hours ago