சீரம் நிறுவனம் சிறுவர்களிடம் 2,3 ஆம் கட்ட தடுப்பூசி பரிசோதனை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரஜெனகாவின் கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மற்ற பிற நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி மக்களால் அதிக அளவில் நம்பி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த தடுப்பூசியை 2-17 வயது சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்கான முதற்கட்ட பரிசோதனை நடந்தது. தற்போதும் அதே வயதுடைய சிறுவர்களுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவனத்திடம் சீரம் நிறுவனம் அனுமதி கேட்டு இருந்தது.
இது பற்றி ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், இந்த குழுவின் பரிந்துரைப்படி சீரம் நிறுவனம் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை சிறுவர்களிடம் நடத்துவதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மறுத்துள்ளது. மேலும் பெரியவர்களிடம் நடத்தக்கூடிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை குறித்த முடிவுகள் வெளிவந்த பின்பு அதன் அடிப்படையில் சிறுவர்களுக்கு பரிசோதனை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…