பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி தற்போது முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
ஏற்கனவே கடந்த 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்தல், நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி 4 பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இதேபோல், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, கிரிராஜ்சிங், அனுராக் தாக்குர், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 2-ம் கட்ட தேர்தலுக்காக 2 கூட்டங்களில் பேசினார். இதேபோல், தேஜஸ்வி யாதவ், கடந்த 28-ந் தேதியில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசி வந்தார். இவர்களது இந்த தீவிர பிரச்சாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பீகாரில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 7-ந் தேதி சனிக்கிழமை நடக்கிறது. இதன் வாக்கு எண்ணிக்கை 10-ந்தேதி செவ்வாய் கிழமை நடக்கிறது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…