புனேவில் தொடங்கிய ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 2- ம் கட்ட மனித சோதனை!

Published by
Surya

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் தொடங்கியது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் உலகநாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாடுகள் மருந்து கண்டுபிடித்து, பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒரு பங்காக, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. அதை மனிதர்களிடம் சோதனை செய்தனர். அப்பொழுது தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 1077 பேருக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்துள்ளதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இந்த தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட மனித சோதனைகாக புனேவில் உள்ள பாரதி வித்யாபீத்தின் மருத்துவக் கல்லூரிக்கு இந்த மருந்துகள் வந்தடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்த மருந்தின் இரண்டாம் சோதனைக்காக 17 கல்லூரி நிறுவனங்கள் தேந்தெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒன்றான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. இன்று காலை மருந்தின் சோதனையை தொடங்கியுள்ளதாக அந்த மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியப்பின், மருத்துவமனையின் துணை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜீதேந்திர ஓஸ்வால், தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர், தன்னார்வலர்களின் நிலைகுறித்து சோதனை நெறிமுறையின்படி கண்காணிக்கப்படுவார்கள் என கூறினார்.

இந்த சோதனை, புனேவில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ், பாட்னாவில் உள்ள ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ அறிவியல் நிறுவனம், சண்டிகரில் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோரக்பூரில் உள்ள நேரு மருத்துவமனை மற்றும் ஆந்திர மருத்துவக் கல்லூரி, விசாகப்பட்டினம் ஆகிய மருத்துவமனைகளில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

18 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

42 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago