உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை சேர்ந்த சுஜித் குமார் (28). இவர் தேவா பகுதியில் உள்ள ராகோபூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தியது.நாய்களுக்கு பயந்து சுஜித் குமார் அருகிலிருந்த வீட்டில் நுழைந்துள்ளார். நாய்களின் சத்தத்தைக் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர் உள்ளே சுஜித்து இருப்பதை பார்த்து திருடன் என நினைத்து வீட்டில் இருந்தவர்கள் சுஜித்தை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் சுஜித் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டனர். தீ தாக்கம் தாங்கமுடியாமல் அலறித் துடித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுஜித்தை மீட்டு லக்னோ உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுஜித் குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…