உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை சேர்ந்த சுஜித் குமார் (28). இவர் தேவா பகுதியில் உள்ள ராகோபூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தியது.நாய்களுக்கு பயந்து சுஜித் குமார் அருகிலிருந்த வீட்டில் நுழைந்துள்ளார். நாய்களின் சத்தத்தைக் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர் உள்ளே சுஜித்து இருப்பதை பார்த்து திருடன் என நினைத்து வீட்டில் இருந்தவர்கள் சுஜித்தை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் சுஜித் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டனர். தீ தாக்கம் தாங்கமுடியாமல் அலறித் துடித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுஜித்தை மீட்டு லக்னோ உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுஜித் குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…