கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 4-ம்கட்டமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், 5-ம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த 5-ம் கட்ட தளர்வில் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், அக்டோபர் 19 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் அரசு அறிவித்தபடி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பள்ளிகள் ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் செயல்படும், இருப்பினும், பள்ளிக்கு மாணவர்கள் வருகை கட்டாயமாக இருக்காது. மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.
ஒரு மாணவர் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றால், அவர் தங்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளைத் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவுக்கு 20 க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…