பஞ்சாபில் அக்.,19 முதல் மீண்டும் பள்ளி திறக்க அனுமதி..!

Default Image

கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 4-ம்கட்டமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், 5-ம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த 5-ம் கட்ட தளர்வில் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், அக்டோபர் 19 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க பஞ்சாப் அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் அரசு அறிவித்தபடி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பள்ளிகள் ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் செயல்படும், இருப்பினும், பள்ளிக்கு மாணவர்கள் வருகை கட்டாயமாக இருக்காது.  மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.

ஒரு மாணவர் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றால், அவர் தங்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளைத் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவுக்கு 20 க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுமதிக்கக் கூடாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman