நாளை முதல் கர்நாடகாவில் மதவழிபாட்டு தலங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மக்களின் வாழ்வாதாரம் கருதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் தற்போது கொரோனா இரண்டாம் அலை காட்டுக்குள் வந்துள்ள நிலையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து நாளை முதல் கர்நாடக மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத வழிபாட்டு தலங்களுக்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள் மற்றும் மத ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…