போக்குவரத்தில் சிக்கி உள்ள வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால், அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்தியா, பங்களாதேஷுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது போதுமான அளவு இருப்பில் இருப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், நாட்டின் வெங்காயம் விலைகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன. பங்களாதேஷின் சில்லறை சந்தையில் ஒரு கிலோவிற்கு 120 வரை உயர்ந்துள்ளது. இது பொதுவாக 80-85 தக்காவில் விற்கப்படுகிறது.
இந்நிலையில், பங்களாதேஷுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான வெங்காய லாரிகள் மேற்கு வங்காளத்தின் பல்வேறு துறைமுகங்கள் மற்றும் நில எல்லைகளில் சிக்கித் தவித்தன. தற்போது எல்லைகளில் உள்ள வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…