ஆந்திராவில் கொரோனா லேகியத்திற்கு அனுமதி ,சொட்டு மருந்துக்கு தடை

Default Image
  • ஆந்திராவில் ஆனந்தய்யா என்பவர் வழங்கும் கொரோனா லேகியத்திற்கு அனுமதி
  • கண்ணில் விடப்படும் சொட்டு மருந்திற்கு தடை 

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தில் ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேதம் முறையில் சிகிச்சை அழைத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் இவர் கொரோனா நோயாளிகளுக்காக மூலிகை மருந்து ஒன்றினை தயாரித்து கொடுத்து வந்தார்.இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரண்டனர்.

இதுபற்றி தகவலிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு , ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யவும் ,அதுவரை ஆனந்தய்யாவின் மருந்து விநியோகத்தை நிறுத்துமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

இது பற்றி ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்த்தானம் ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் அவர் கொடுக்கும் மருந்தில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.

இவை முற்றிலும் முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனந்தய்யா  லேகியத்தை மட்டும் வழங்கலாம் என்றும் கண்ணில் விடப்படும் சொட்டு மருந்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்