உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் சாட்டா நகரில் உள்ள பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் பிரேம் சிங் மர்ம நபர்களால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டுள்ளார். இவர் பெப்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று சக ஊழியருடன் பைக்கில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம ஆசாமிகள் அவரைத் தலையில் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அங்கு நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோவில், ப்ரெம்சிங் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டும் வருவார், அந்த சக ஊழியர் பைக்கை ஒட்டி கொண்டு போவார். அப்போது பின்னில் அமர்ந்து இருந்த பிரேம் சிம்ரன் திடீரென அவரது முதுகில் சாய்ந்து நிலை தடுமாறி தரையில் விழுந்து விடுவார்.
அதனை கண்ட அந்த சக ஊழியர் வண்டியை நிறுத்தி விட்டு, உதவிக்காக நடு ரோட்டில் கையை அசைத்து உதவி கேட்பார், இது அனைத்தும் நாம் அந்த வீடியோவில் காணலாம். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி பிரேம் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் யார்?, எதற்காக இதை செய்தனர் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மனதை உலுக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…