புதுச்சேரி முதல்வரை சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி…!

Default Image

புதுச்சேரி முதல்வரை சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் அவரது இல்லத்தில்  மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பேரும் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசிய விஜய்சேதுபதி அவர்கள், புதுச்சேரியில் படப்பிடிப்புக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.28,000 வசூலிக்கப்படுவதாகவும், எனவே சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்