குடும்ப மருத்துவ காப்பீட்டை காலாவதியாவதற்கு முன்பதாகவே புதுப்பிக்கும் மக்கள்….!

Published by
லீனா

இந்த ஆண்டு தங்கள் சுகாதார காப்பீட்டு கொள்கைகளை புதுப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகம். 

மத்தியில் பெரும்பாலான மக்கள் தங்களது சுகாதார காப்பீட்டை காலாவதியாவதற்கு முன்பதாகவே புதுப்பித்து வருகின்றனர். இதுகுறித்து பாலிசிபஜார்.காம் மேற்கொண்ட ஆய்வின் படி கடந்த ஆண்டுகொடுக்கப்பட்ட அனைத்து குடும்ப சுகாதார காப்பீட்டு கொள்கைகளில் 85% மேற்பட்டவை காலாவதி ஆவதற்கு முன்பதாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் சுகாதார காப்பீட்டு திட்டங்களை சுமார் 80% வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்கைகளை திட்டமிட்ட காலத்துக்குள் புதுப்பித்துள்ளனர்.

இதுகுறித்து பாலிசிபஜார்.காமின் தலைமை சுகாதார காப்பீட்டின் தலைவர் அமித் சாப்ரா கூறுகையில், மக்கள் கொரோனா வைரஸ், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மக்களை தாக்க கூடும் என்றும் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக தொற்று நோயிலிருந்து நிதி ரீதியாக தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி ஒரு விரிவான ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டு தங்கள் சுகாதார காப்பீட்டு கொள்கைகளை புதுப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆன்லைன் மூலமாக, தனிப்பட்ட சுகாதார காப்பீடு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் 94% பேர் புதுப்பித்துள்ளனர். அதேசமயம் குடும்ப சுகாதார காப்பீடு திட்டத்தை 97% சதவீதம் பேர் புதுப்பித்துள்ளனர். இத்தகைய உயர் புதுப்பித்தல் விகிதங்களை பார்க்கும் போது, தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும்போது, செலவைப் பற்றி கவலைப்படாமல் சிறந்த சுகாதார வசதிகளை பெறுவதில் காப்பீட்டின் பங்கை மக்கள் படிப்படியாக உணர்ந்துள்ளனர்.

சுகாதார காப்பீட்டு கொள்கையை உரிய தேதிக்குள் புதுப்பிப்பதின் மூலம் ஒருவர் தடையற்ற பாதுகாப்பு உரிமை கோரல், போனஸ் சலுகைகள் போன்ற சலுகைகளை பெற தங்களது ‘wellness points’-ஐ பயன்படுத்துகின்றனர். மேலும், நுகர்வோர் இப்போது சுகாதார காப்பீட்டு புதுப்பித்தலின் போது பிரீமியம் தள்ளுபடியைப் பெற தங்கள் ‘wellness points’-ஐ பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை வாங்கியவர்களில் 20% க்கும் அதிகமானோர் இந்த ஆண்டு ‘wellness points’ மூலம் தங்களது காப்பீட்டை புதுப்பித்துள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

23 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

50 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago