டெல்லியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ளது!

Default Image

டெல்லியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 88.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. அந்தவகையில், அங்கு புதிதாய் 1,497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,31,219 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,497 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,16,372 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 88.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அங்கு இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,853 ஆக அதிகரித்துள்ளது.  அங்கு 10,994 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்