கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டு பின்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. இப்போது அந்த புதிய 2000 நோட்டுகள் அதிகமாக ஏ.டி.எம். எந்திரங்களில் காண முடிவதில்லை.
இந்த நோட்டுக்களை அச்சடிக்கும் வேலை ஒரளவு குறைக்கப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தரப்பிலும் கூறப்பட்டது. எனவே 2000 ரூபாய் நோட்டுகள் எந்த நேரத்திலும் செல்லாதவைகளாக அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் ஆகி விடும் என மக்கள் கவலைப்படத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் நோட்டுக்களின் பயன்பாடு குறைந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது என்று கூறினார். பின்பு அவர் கடந்த நிதி ஆண்டில் ரூ.3,313 கோடி அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என தெரிவித்தார்.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…