கொரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Default Image

கொரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்றும்  அறிவிக்கப்பட்டது. இதனால்  பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி கூறுகையில், கொரோனா பாதிப்பு உள்ள ஒருவர் அவரது குடும்பத்தில் மற்றவர்களுக்கு  கொரோனாவை பரப்புகிறார்.கொரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். கொரோனா பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வருகின்றனர். என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்