மகாராஷ்டிராவில் இனி மின்சார அளவீட்டை மக்களே அனுப்பலாம்!

Published by
Rebekal

ஊரடங்கு காரணமாக மின்சாரத்திற்கான மீட்டர் கணக்கீட்டை இனி மக்களே மொபைல் மூலமாக அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மிக தீவிரமாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கடமையாக்கப்பட்டு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் பல இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாநில மின்சார விநியோக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று மின்சார மீட்டர் அளவை எடுக்க முடியாததால் இனி கடைக்காரர்களும் சரி, மக்களும் சரி தங்கள் வீடுகளில் உள்ள மின்சாரத்திற்கான மீட்டர் அளவுகோலை தாங்களே மொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. எந்த தினத்தில் அளவு எடுக்கவேண்டுமோ அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பதாகவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படும். இந்த எஸ்எம்எஸ் பார்க்கக்கூடிய நுகர்வோர் அந்த நான்கு நாட்களுக்குள் மீட்டர் அளவுகோலை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமாம்.

அதன்பின் யார் பெயரில் மின்சார கட்டண அட்டை உள்ளதோ அவர்கள் நேரில் சென்று இந்த பணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் நேரடியாக மீட்டர் அளவு எடுப்பவர்கள் இனி வீட்டிற்கு வர மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் யார் பெயரில் மின்சார மீட்டர் அளவுகோல் புத்தகம் இருக்கிறதோ அவர்கள் நேரில் செல்ல முடியாவிட்டால் https://www.mahadiscom.in இந்த இணையதளத்தில் பெயர் மாற்றி பதிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago