Categories: இந்தியா

மக்களே உஷார்.!! சிறுமிக்கு முதல் பறவை காய்ச்சல் ..எச்சரிக்கை விடுத்த சுகாதார அமைப்பு!

Published by
அகில் R

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் உள்ள 4 வயது சிறுமிக்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

பறவை காய்ச்சல் எனப்படும் H9N2 கிருமியானது காற்றின் மூலம் பரவக்கூடிய ஒன்றாகும். இது பெரும்பாலும் பறவைகளிலிருந்து சில நேரம் விலங்குகளுக்கும், சில நேரங்களில் இது மனிதனுக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டதாகும். இந்த H9N2 கிருமி தான் அந்த 4 வயது சிறுமிக்கு தொற்று விளைவித்துள்ளது.

அந்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஏதேனும் பண்ணைகளிலிருந்து இந்த தொற்று பரவியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும், சிறுமியுடன் இருந்த குடம்பத்தினருக்கோ அல்லது அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கோ எந்த தொற்றும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தீவிர காய்ச்சலால் அவதி பட்டு வந்த 4 வயது சிறுமிக்கு இந்த பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. இதனால், கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் பறவை காய்ச்சல் தொற்றை 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், அதீத காய்ச்சல் மற்றும் வயிற்று கோளாறால் 3 மாதங்கள் அவதி பட்டு வந்து அந்த சிறுமி தற்போது நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக இடங்களில் இது போல உருவாகி வரும் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதோடு, அதற்கென தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

ஆண்ட்ரே ரஸ்ஸலை எப்படி யூஸ் பண்றீங்க? டென்ஷனாகி கேள்வி எழுப்பிய அனில் கும்ப்ளே!

கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…

22 minutes ago

கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!

சென்னை :  கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…

1 hour ago

பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…

2 hours ago

“தமிழக அரசே என்னை தான் ஃபாலோ பண்றாங்க.” சீமான் பரபரப்பு பேட்டி!

கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…

2 hours ago

குஜராத்திடம் தோல்வி அடைந்த கொல்கத்தா! இதை செஞ்சிருந்தா வெற்றிபெற்றிருக்கலாம்…

கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…

2 hours ago

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago