அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
இன்று அதிகமானோர் ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுப்பதுண்டு. அந்த வகையில், பல இடங்களில் ஏடிஎம் இருந்தாலும், ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால், வங்கிகளுக்கும், வொயிட் லேபிள் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கும் மேல் பணம் இல்லை எனில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஒருவேளை ஏடிஎம்மில் பணம் இல்லை எனில், அந்த ஏடிஎம் மையத்திற்கு பணத்தை விநியோகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட வங்கிகள் விரும்பினால் வொயிட் லேபிள் நிறுவனத்திடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்றும், ஒருவேளை ஏடிஎம்களின் செயலிழப்பு குறித்து வங்கிகள் முறையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎமில் எவ்வளவு நேரம் பணம் இல்லை எனும் தகவலை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும், எந்த பகுதியில் எந்த ஏடிஎம்மில் பணம் இல்லை என விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை வொயிட் லேபிள் நிறுவனத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்களில் பணம் இல்லாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்கப்படும் திட்டமானது, பொதுமக்களுக்கு போதுமான பணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் நடைமுறைப்படுத்தபடவுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…