டெல்லியில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்..! ஆனால் இவர்களுக்கு அபராதம் இல்லை – டெல்லி அரசு

Default Image

டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்தது. அதன்படி, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் முக கவசம்  அணியுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இந்த அபராதம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்