தானேவில் அடுத்த வாரம் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை 2,000லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில், மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்தது. அதன்படி கிட்டத்தட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதம் அதிகரிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் அரசுகள் தங்கள் விருப்பப்படி இந்தத் திருத்தங்களைச் செய்தனர். ஆனால், மகாராஷ்டிர அரசு இந்தத் திருத்தங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் முதல் மகாராஷ்டிராவில் திருத்தங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அனில் பராப் கூறியிருந்தார். அதன்படி, டிசம்பர் 1 அன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை உயர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு தானே போக்குவரத்து காவல்துறை புதிய அபராதத் தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, தானேவில் அடுத்த வாரம் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை 2,000லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என்று போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…