திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய நடிகை பயல் கோஷ், இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மாவை சந்தித்தார்.
இதற்கு முன், திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் எதிராக மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், அனுராக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அக்டோபர் 1 -ம் தேதி, அனுராக் காஷ்யப்பை பாலியல் வன்கொடுமை வழக்கில் வெர்சோவா போலீசார் விசாரித்தனர்.
ஒரு நாள் கழித்து அவரது வழக்கறிஞர் பிரியங்கா கிமானி நடிகை பயல் கோஷ் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், பயல் கோஷின் புகார் ஒரு “வெளிப்படையான பொய்” என்று கிமானி கூறினார்.மேலும், 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனுராக் தனது ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக இலங்கையில் இருந்தார் என்பதற்கு ஆவண சான்றுகளை அனுராக் வழங்கியுள்ளார்.
இதுபோன்ற எந்தவொரு சம்பவமும் இதுவரை நடக்கவில்லை என்று அனுராக் திட்டவட்டமாக மறுத்துள்ளார், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார் ” என்று அனுராக் வழக்கறிஞர் கூறினார்.
இந்த வழக்கு முழுவதையும் மும்பை காவல்துறையினர் நியாயமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக கோஷ் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…