கடன்களை செலுத்தி விடுகிறேன் , வழக்குகளை முடித்து விடுங்கள் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை தேதி நீதிமன்றம் வழங்கியது.
பின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.இதற்குஇடையில் தான் விஜய் மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை மீட்டெடுக்க இந்திய அரசு அறிவித்துள்ளதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா தேவைக்கு ஏற்றது போல ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம்.ஆனால் நான் பலமுறை 100% கடனை திரும்ப செலுத்துகிறேன் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.ஆனால் அந்த கோரிக்கை புறந்தள்ளப்பட்டு வருகிறது.நான் செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்திவிடுகிறேன்.மேலும் என் மீது உள்ள வழக்குகளை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…