குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – உ.பி முதல்வர் வேண்டுகோள்!

Default Image

உத்தரப் பிரதேச மாநிலம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முறையாக கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளை பின்பற்றுமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கௌதம புத்தர் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 103 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும்,காசியாபாத் பகுதியில் புதிதாக 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹாப்பூர், மீரட், புலந்த்ஷாஹர் மற்றும் பாக்பத் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் கொரோனா பரவி வருவதால் தீவிரமாக கொரோனா கட்டுப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது 856 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெரு வருகின்றனர். இதனையடுத்து குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற கற்று கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி விழிப்புணர்வு இன்னும் திருப்திகரமாக இல்லை எனவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்