BJP: நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று அறிவித்தது.
நட்சத்திர வேட்பாளராக, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குவங்கம் அசான்சோல் தொகுதியில் பாஜக சார்பில் போஜ்புரி நடிகர் பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மேற்குவங்கம் அசான்சோல் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் பவன் சிங் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அவர் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
போஜ்புரி பாடகரான பவன், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளதாக, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இம்முடிவை எடுத்துள்ளார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகரிகா கோஷ் உள்ளிட்டோர் பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சனங்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…