நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் தற்போதைக்கு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கிய பவன் கல்யாண், அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். இதனால் பா.ஜ.க. சார்பில் களமிறக்கப்படும் தலைவராக பவன் கல்யாணை ஆந்திர மக்கள் கருதி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டி அளித்த அவர், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களால் ஆந்திராவில் பா.ஜ.க. மீதான மக்கள் மனநிலை மொத்தமாக எதிர்மறையாகி விட்டதாக தெரிவித்தார். இந்தச் சூழலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தற்போதைக்கு சாத்தியமே இல்லை என்றும் பவன் கல்யாண் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…