பாட்டியாலா மோதல் – சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது..!

Default Image

பாட்டியாலாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் நிலவிய நிலையில் தொடக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் சற்று நேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

கலவரம் தொடர்ந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் பகவான் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்திற்குப் பின் பாட்டியாலாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்