இந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு எந்தொரு நிறுவனமும் முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன் வரும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் விவோ ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக ஐ.பி.எல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பி.சி.சி.ஐ தெரிவிக்கவில்லை.
இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸர்களை தேடுவதாக பிசிசிஐ தரப்பிலிருந்து செய்திகள் வெளியான நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், அண்மையில் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பாபா ராம்தேவ் கூறுகையில், இந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு வேறு எந்தொரு இந்திய நிறுவனமும் முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன் வரும் என தெரிவித்தார். மேலும், சீன நிறுவங்கள், இந்திய சந்தையை ஆக்கிரமிக்க ஒருபோதும் விடமாட்டேன் என கூறிய அவர், ஐபிஎல் ஸ்பான்ஸராக இருக்க விரும்புவதாக பிசிசிஐயிடம் எதுவும் தெரிவிக்கவில்லை றன தெரிவித்தார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…