Categories: இந்தியா

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலில் தீ விபத்து! அடுத்தடுத்த 5 பெட்டிகள் எரிந்து நாசம்…

Published by
கெளதம்

மகாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாராயண்தோஹ் மற்றும் அஹமத்நகர் பிரிவுக்கு இடையில் பிற்பகல் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது.

அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால் 5 பெட்டிகள் மொத்தமாக எரிந்து நாசமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாலை 4.10 மணியளவில் தீயை அணைத்தனர்.

நல்வாய்ப்பாக தீ பரவுவதற்கு முன்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதா அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாக வில்லை.  தற்போது, விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதலில் காவலர் பக்க பிரேக் வேனில் ஏற்பட்ட தீ, வேகமாக அருகில் இருந்த நான்கு பெட்டிகளுக்கும் பரவியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிலருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கிறது.

Published by
கெளதம்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago