Categories: இந்தியா

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலில் தீ விபத்து! அடுத்தடுத்த 5 பெட்டிகள் எரிந்து நாசம்…

Published by
கெளதம்

மகாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாராயண்தோஹ் மற்றும் அஹமத்நகர் பிரிவுக்கு இடையில் பிற்பகல் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது.

அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால் 5 பெட்டிகள் மொத்தமாக எரிந்து நாசமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாலை 4.10 மணியளவில் தீயை அணைத்தனர்.

நல்வாய்ப்பாக தீ பரவுவதற்கு முன்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதா அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாக வில்லை.  தற்போது, விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதலில் காவலர் பக்க பிரேக் வேனில் ஏற்பட்ட தீ, வேகமாக அருகில் இருந்த நான்கு பெட்டிகளுக்கும் பரவியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிலருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கிறது.

Published by
கெளதம்

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

7 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

8 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

8 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

9 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

10 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago