நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூட்டத்தொடர் தொடங்க முடியவில்லை.
பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு 12 நாட்கள் முன்பாகவே (மார்ச் 23) முடிக்கப்பட்டதால், இரு கூட்டத் தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால் மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இரு அவைகளையும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எல்லை விவகாரம், பொருளாதார வீழ்ச்சி, உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…