எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று காலை ஆலோசனை நடத்திய சூழலில்,பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வருகை புரிந்தனர்.
இந்நிலையில்,பெகாசஸ் உளவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மையப் பகுதியில் கூடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலங்களவையானது 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல ,மக்களவையில் கேள்வி நேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் அங்கும் முழக்கங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இருப்பினும்,சபாநாயகர் ஓம் பிர்லா தொடர்ந்து அவையை நடத்தி வருகிறார்.
முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்பு புகார் தொடர்பாக இரு அவைகளிலும் தற்போது முழக்கங்கள் எழுந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…