Categories: இந்தியா

ஜூலை 23இல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! கூட்டத்தொடர் விவரம் இதோ…

Published by
மணிகண்டன்

டெல்லி: வரும் ஜூலை 23ஆம் தேதி 2024- 2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து இருந்தார். மக்களவை தேர்தலை அடுத்து மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக நியமிக்கபட்டர்.

இதனை அடுத்து 2024 -2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டானது வரும் ஜூலை 23இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என்றும், இதற்காக நாடளுமன்றத்தை கூட்டுவதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார் என அறிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

15 hours ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

19 hours ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

19 hours ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

20 hours ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

20 hours ago

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

20 hours ago