ஜூன் 24ல் கூடுகிறது நாடாளுமன்றம்! புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு.!

புதுடெல்லி : 18ஆவது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

Parliament is in session

புதுடெல்லி :18ஆவது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும்.

குடியரசுத் தலைவர், சபாநாயகர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெறும். அன்று உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பின்னர், ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

அதன்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். இதற்கிடையில், ராஜ்யசபாவின் 264வது கூட்டத்தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி முடிவடைகிறது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27 அன்று உரையாற்றுவார். அன்றைய தினம் குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு, பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் குழுவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.