மூத்த மகளின் சிகிக்சைக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு 45வயதான நபருக்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் தனது 12 வயது மகளை 46 வயதான பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்ன சுப்பையா என்பவருக்கு ரூ.10,000 -க்கு விற்றுள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவாச நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகளின் மருத்துவ சிகிச்சைக்காக அயல்வரான சின்னா சுப்பையாவிடம் இந்த தம்பதியினர் ரூ.25,000 கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுப்பையா இந்த தம்பதியினரின் இரண்டாவது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் ரூ.10,000 கொடுக்க ஒப்பு கொண்டுள்ளார்.அதன் பின் அந்த தம்பதியினர் தனது இரண்டாவது மகளை மூத்த மகளின் சிகிக்சைக்காக ரூ.10,000-க்கு விற்றுள்ளனர் . அதன்பின் கடந்த புதன்கிழமை சுப்பையா 12 வயது மைனர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு தம்பூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கே அந்த சிறுமியின் அழு குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் குழந்தை மேம்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க அவர்கள் சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தை சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டார் .ஒரு குழந்தைக்காக மற்றொரு குழந்தையை விற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…