ஆந்திர மாநிலத்தில் உள்ள ரெட்ல பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகள் சாந்தனி.இவர் வேற்று சாதியை சார்ந்த நந்தகுமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு வெங்கடேஷ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சாந்தனி நந்தகுமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த செய்தி சாந்தனி தந்தை வெங்கடேஷ் , தாய் அமராவதி மற்றும் உறவினர்களுக்கு தெரிய வர கோபம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து திருமணம் ஆன சில மணி நேரத்திலேயே சாந்தனியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சாந்தனியை சிறிது நேரத்தில் தங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊர் மக்களிடம் சாந்தனி பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சாந்தனி உடலை அவசரஅவசரமாக பெட்ரோல் ஊத்தி கொளுத்தி அவரது சாம்பலை அங்கிருந்த நீரிலும் கரைத்துள்ளனர். சாந்தனியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரிகள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சாந்தனியை அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் கயிறால் கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு நாடகமாடிய சம்பவம் அம்பலமானது. இதைத் தொடர்ந்து தந்தை வெங்கடேஷ் ,தாய் அமராவதி , முனிராஜ் மற்றும் வர மூர்த்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…